Saturday, 1 August 2020

சிறுகுடி வேளாளர்

சிறுகுடி வேளாளர்

சங்க இலக்கியங்கள் தொல்குடி, முதுகுடி, பெருங்குடி, சிறுகுடி என்று கூறுகின்றது.
சிறுகுடி என்பதற்கு சிறு சாதி என்று அர்த்தம் அல்ல அவர்கள் வேளிரை போன்ற குறுநிலை மன்னர்கள் என அர்த்தம்.
குறிஞ்சி திணை அடிப்படையில் இல்லத்துப் பிள்ளைமார்கள் சிறுகுடி வேளாளர். மருத திணை அடிப்படையில் வேளாளர்கள் என்பது மற்றவர். குறிஞ்சி திணைக்குரியது தான் மலையும் மலை சார்ந்த இடம் சிறுகுடி, மேலும் வில்லவர், தீயர் என்ற அடிப்படையிலும் தாய் வழி‌ சமூகம் என்பதாலும் நாங்கள் சிறுகுடி. திய்யா என்ற திசா வழியில் நாகர் இனத்தை சார்ந்த வேளாளர் நாங்கள் இதன் அடிப்படையில் தான் #சிறுகுடி_வேளாளர் என்று அழைக்கபடுகிறோம்.
திணை என்ற சொல் உயர்ந்த பொருளிலேயே சங்க இலக்கியங்களில் ஆளப்பெற்றுள்ளது. அக்கால ஒழுக்கக் கோட்பாடுகளின்படின் நானிலத் திணைக் குடிகளும் அடிமைகளுக்குரிய ஒழுக்கக் கோட்பாட்டினைப் பின்பற்றியவர்களாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. குடி, குடும்பம் என்ற அமைப்பைப் பின்பற்றியவர்களாகவே இருந்திருக்க வேண்டும். இக்குடிகளுள் #பெருங்குடி, #சிறுகுடி என்ற பிரிவுகள் இருந்தன. #சிறுகுடி என்பது நெகிழ்ச்சியான குடும்ப அமைப்பை உடையதாகும்.
சிறுகுடி பாக்கம் குறிஞ்சி நிலத்தினில்
பெருங்குடி அமைத்திட்ட குன்ற குறவோர்
மறுகுடி உலகில் தழைத்து ஓங்கிட
திருவடி அடைந்தனர் சேயோன் இடத்தே - குறிஞ்சி திணை


No comments:

Post a Comment